தித்திக்கும் பொங்கல் தின வாழ்த்துக்கள்

வன்னித்தென்றல் வாசகர்கள், எழுத்தாளர்கள், மற்றும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் தித்திக்கும் பொங்கல் தின வாழ்த்துக்களை வன்னித்தென்றல் இணையக்குழு தெரிவித்துக்கொள்கின்றது.

கால ஓட்டத்தில் கலந்திடுக்கும் எம் இனத்தின் வடுக்களை களைந்து ஈழ தேசத்தின் விடுதலைக்காய் நாம் அனைவரும் ஒற்றுமைப்பட்டு உழைத்திடும் புதிய ஆண்டாக, காலமாக இன்று முதல் புதிய அத்தியாயம் ஒன்று உருவாகட்டும்.
சுயத்தின் பிரதிபலிப்புக்களுக்கு அப்பால் சுதந்திரப் போரில் சாவடைந்த மக்களையும் அந்த மக்களுக்காகவும் எமக்காகவும் களத்தில் வித்தான மாவீரர்களின் கனவுகளை நிஜமாக்க வேண்டும் என்ற உறுதியுடன் அனைவரும் செயற்ப்படுவோம்...

மீட்சி பெறும் ஈழத்திற்கான எதிர் பார்போடு
வன்னித்தென்றல் இணையம்

PostHeaderIcon முற்றம் வா தை மகளே முன்பிருந்த நிலை தா

கார்காலக்கனவுகளுக்குள்
கருநாகம் புகுந்தது
ஏர் பூட்டி உழத நிலமெலாம்
எரி யூட்டும் பிணங்களால்
நிறைக்கப்பட்டது...!

காலார நடந்த தேசம்
மனதார சென்ற கோயில்
மந்தாரமிடும் வனப்பு
ஓடி விளையாடிய வரம்பு
பாடித்திரிந்த பள்ளிகள்...!

Read more...

 

PostHeaderIcon இலங்கை அரசியலை தீர்மாணிக்கும் சக்தி தமிழ் பேசும் சமூகத்திடம்.

நடைபெறவிருக்கும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 22 வேட்பாளர்களில் பிரதான கட்சிகளைச்சேர்ந்த இரு வேற்பாளர்களுக்கிடையில் கடுமையான போட்டி நிலவிவருகின்றமை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் தற்போதய சூள்நிலையில் அவை மேலும் வலுப்பெற்றுள்ளன. சிறுபிள்ளைக்கு டொபியை கொடுத்து சாப்பாடு ஊட்டுவதுபோல் கட்சி மாறுபவர்களுக்கெல்லாம் அமைச்சு பதவிகொடுத்து தம் கட்சிக்குள் உள்ளிலுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ச ஒருபுறமும்இ எதுகேட்டாலும் தருகிறேன். பதவிஏற்றவுடன் நீங்கள் கேட்கும் அமைச்சை உடனே தருகிறேன்.

Read more...

 

PostHeaderIcon பாலா அண்ணா –தமிழ் தேசியத்தின் பேச்சு

பாலா அண்ணா பெயரை சொன்னாலே கண்கள் ஒரு நொடி பனிக்கத்தான் செய்கின்றது. தனது வாழ்நாள் முழுவதையும் தமிழீழ தேசத்துக்காய் அர்ப்பணித்து செயலாற்றிய அரசியல் மூதறிஞர். தூயக மக்களின் விடுதலையை, சுபீட்சமான எதிர்காலத்தை களத்தில் நிற்க்கும் ஒரு போராளி எந்த அளவுக்கு நேசித்தானோ அந்த அளவுக்கு பாலா அண்ணாவும் நேசித்தார். ஈழக்களங்களுக்கு தூரதேசங்களில் நியாயம் கேட்டு திரிந்த நல்லுள்ளம்.

Read more...

 

PostHeaderIcon முதலீடு செய்வோம் வாருங்கள்…

போர் நின்று விட்டது. அமைதி தளிர்த்து எம் மக்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். எம் தேசத்தில் கிடைக்காத அத்துனை உரிமையையும் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளது. 11ம் போராளிகளுக்கும் மறுவாழ்வளிக்கின்றது. அது மட்டுமன்றி இன்னோரேன்னா வசதிகள் மூலம் தமிழ் மக்கள் சிங்கள மக்களின் அனுசரனைக்குள்ளாகி மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

Read more...

 

PostHeaderIcon மீண்டும் மீண்டும் எழும்!

செந்தணல் எரியும் தேசத்தின் புதல்வர்களே
செய்தி ஒன்று வரும் என்று காத்திருக்கும்
காணகத்தின் நண்பர்களே!
நிழல் எது நிஜம் எது தெரியாது
தினம் தினம் வீசும்
அறிக்கை வாளில் வெந்து நொகும்
புலம் பெயர் உறவுகளே!

Read more...

 

PostHeaderIcon எல்லாளன்

எல்லாளன் படை நடவடிக்கையின் வெற்றியில் வெளியிடப்பட்ட பாடல் இறுவெட்டு. கவிஞர். காசியானந்தனில் பாடல்களை தென்னிந்திய கலைஞர்கள் பலர் இணைந்து உயிர்கொடுத்துள்ளனர். இப்பாடல் ஒலித்தட்டு முழுமையாக இங்கே கேட்கவும், தரவிறக்கும் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.


Read more...

 

PostHeaderIcon வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்றேரம்

நெஞ்சுக்குள் ஆயிரம் சுமை
கொஞ்சமும் சிரித்திட முடியா சோகம்
கெஞ்சி கெஞ்சி உலகில் நாம்
ஏதிலியாய் ஆன போதும்
தலைவா   உன் பிறந்த நாளுக்காய்
தமிழினம் சிரிக்குது!

Read more...

 

PostHeaderIcon மாவீரர்களின் பெயரால் இதைச் செய்வோமா

கண்கள் குளமாக எங்கள் கண்மணிகளை நாங்கள் நினைந்துருகும் நாள்.

ஒட்டு மொத்தத் தமிழனத்தின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற துடிப்புடன், தமிழினத்தின் அடிமை விலங்கறுக்க வேண்டுமென்ற ஆவேசத்துடன், தமிழ் மண்ணிலே தமிழன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தம் உயிரையே துச்சமென மதித்து தீரத்துடன் போராடித் தம் இன்;னுயிர்களைத் தியாகம் செய்த எம் தமிழ் மறவர்களுக்கான நாள்.

Read more...

 



 

Who's Online
We have 1 guest online
feed-image